Posts

Showing posts from March, 2025

சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள்

 சாப்பிட்ட  பிறகு  செய்யக்கூடாதவைகள்.  அவசியம்  அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம். ======================= 1. சாப்பிட்டவுடன்  தண்ணிரை  வயிறுமுட்ட  குடிக்க  கூடாது.  இதனால்  ஜிரணநீர்  நீர்ந்து  போய்  அஜிரணமாகும்  பல  நோய்கள்வர  இது  முக்கிய  காரணமாக  அமையும்.  2. சுமார் 40 நிமிடம் கழித்து  தண்ணீர்தாகம்  எடுக்கும்  அப்போது குடிக்கவேண்டும். 3. சாப்பிட்டதும்  படுத்து விடக்கூடாது. காரணம், குடல்  தனது  செயல்பட மிகவும்  சிரமப்படும். ஜீரணம்  முறையாக  நடக்காது. 4. குறைந்தது  ஒரு  மணிநேரம்  கழித்தே  உறங்க  வேண்டும்.  இது  மதியம்  ஓய்வு  எடுப்பவர்களுக்கும்  பொருந்தும். 5. சாப்பிட்டதும்  குளிக்க  கூடாது  குறைந்தது 2 மணிநேரம்  கழித்தே  குளிக்க  வேண்டும். 6. சாப்பிட்டு  முடித்ததும்  எந்த  பழங்களையும் சாப்பிடக்கூடாது.  காரணம்,  உணவின் ஜீரண நேரம் குறைந்...

நேபாளிய மக்களின் நீண்ட ஆயுளின் இரகசியம் இது

 நேபாளிய மக்களின் நீண்ட ஆயுளின் இரகசியம் இது.....! முளை கட்டிய பயிர்களை சாப்பிடுங்கள்..பிறகு பாருங்கள் எப்படிப்பட்ட நன்மை கிடைக்கிறது என்று.... முளை கட்டிய பயிரில் என்ன இருக்கு? 1. ஊட்டச்சத்துக்கள் கிரகித்தல் அதிகரிக்கிறது. குறிப்பாக, பி12, இரும்புச்சத்து, மக்னீசியம், துத்தநாகம் அதிகம் கிடைக்கிறது. 2. அதிகப் புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும். 3. நார்ச்சத்து அதிக அளவில் கிடைக்கிறது. இதனால், செரிமானம் மேம்படுகிறது. 4. புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது. சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது. 5. தானிய ஒவ்வாமைக்கான வாய்ப்பைக் குறைக்கிறது. 6. உடலுக்குத் தேவையான என்ஸைம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் கிடைக்கிறது. 7. உடல் எடை குறைக்க உதவுகிறது. 8. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வளர்ச்சியை மேம் படுத்துகிறது. முளை கட்டிய பயிரை எப்படிச் சாப்பிடணும்? 1. பச்சையாகச் சாப்பிடுவது நல்லது. 2. வேகவைத்துச் சாப்பிடக்கூடாது. 3. எண்ணெயில் பொரித்துச் சாப்பிடக் கூடாது. 4. முளைகட்டிய பச்சைப் பயறை நீர் சேர்த்து அரைத்து, வெல்லம், தேன், தேங்காய்த் துருவல், உலர் திராட்சை ...

தினசரி கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள்

 தினசரி கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள்: * உடல் எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருளாகும். காலை எழுந்தவுடன் 1- 2  டம்ளர். இளம் சூடான தண்ணீருடன் 2  டீஸ்பூன் எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகுத் தூள் சேர்த்து தினமும் குடிக்க வேண்டும். * வேக நடை, சைக்கிளிங், ஸ்க்கிப்பிங், குறைந்தது 35 நிமிடம் உடற் பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும். * காபி, டீ அருந்தும் பழக்கம் உடையவராக இருந்தால் அதற்குப்  பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீ-யில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம்.பால் சேர்த்து அருந்த விரும்புவர்கள் பாலை நன்கு 3 அல்லது 4 முறை காய்ச்சி பால் ஆடையை  நீங்கிய பின் அருந்தலாம். காரமான உணவுப் பொருள் இஞ்சி,  மிளகு, இலவங்கப்பட்டை மிகவும் சிறந்தது.  இஞ்சி டீயை 2 – 3 முறை குடிக்கலாம் * டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி ,கேரட் போன்ற கலோரி குறைவான,அதிக வைட்டமின் மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக உண்ண வேண்டும்.இதனால் உடல் ஆரோக்கியமாக  இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும். அதிக பசியும் எடுக்காமல்...

நான்கு சொட்டு நல்லெண்ணெ

 நான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்டு பாருங்கள்..!! அடுத்த கணத்தில் தெரியவரும், அதிர்ச்சி..? பொதுவாக நம்முடைய உடலில் என்ன பிரச்சனையாக இருந்தாலும் ரத்தப் பரிசோதனை அல்லது சிறுநீர் பரிசோதனை செய்து பார்த்து, டாக்டர் கூறுவதை கேட்டு நம்முடைய பிரச்சனையைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஆனால் நம்முடைய சித்தர்கள் எந்த ஒரு டாக்டரின் துணை இன்றி அவர்களுடைய சிறுநீரை அவர்களாகவே சோதனை செய்து, என்ன வியாதி இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவார்கள். சித்தர்கள் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்க்கும் முறை அவ்வளவு கஷ்டமானது கிடையாது. அந்த முறையைப் பயன்படுத்தி நாமே நம்முடைய சிறுநீரைப் சோதனை செய்து தெரிந்து கொள்ள முடியும். நம்முடைய உடலில் உண்டாகும் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் தான் காரணம் என்று ஆரம்பத்திலே நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர் அதில் எந்த ஒன்று நம்முடைய உடலில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டாலே போதும் அதை நாம் குணப்படுத்த முடியும். இதைத்தான் நம்முடைய சித்தர்கள் சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டுபிடித்தனர். இந்த மூன்றும் சிறுநீரில் எந்த அளவுக்கு உ...

இட்லி - தமிழரின் ஆதி உணவு

 இட்லி - தமிழரின் ஆதி உணவு (ஒரு ஆய்வுக் கட்டுரை)🍀🍀🍀🍀  இட்லி (இட்டளி) என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு பதார்த்தம். இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. வெண்மையான நிறத்தில் இருக்கும். அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இட்லியின் வரலாறு:- இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். எனினும் இது பற்றிய தெளிவான ஒரு வரலாறு கிடைக்கவில்லை. இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக என்பதாகும். இட்லியின் துணை உணவுகள்:- இட்லியினை உட்கொள்வதற்கும், சுவையினைக் கூட்டுவதற்கும் சில துணை உணவுகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. 1.சட்னி 2.சாம்பார் 3.மிளகாய்ப் பொடி / இட்லிப் பொடி 4.சர்க்கரை 5.தயிர் இட்லியின் வகைகள்:- இட்லியில் பலவிதமான வகைகள் உண்டு. அவற்றில் சில: 1.செட்டிநாடு இட்லி 2.மங்களூர் இட்லி 3.காஞ்சிபுரம் இட்லி(செய்முறை) 4.ரவா இட்லி 5.சவ்வ...

சர்க்கரை நோய்

 சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.!!! சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்:  #வரக்கொத்தமல்லி (Coriander-தனியா) --- அரை கிலோ வெந்தயம் ---கால் கிலோ... தனித்தனியாக மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து பொடி செய்து இரண்டையும் நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும். கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்ளராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சாப்பிட்டு வரவும். இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது. ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.

வீட்டில் செய்யக் கூடிய எளிய மருத்துவ குறிப்புகள்

 #வீட்டில்செய்யக்கூடியஎளியமருத்துவகுறிப்புகள்... **இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். ** சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும்.  **மல்லாந்து படுக்கும்போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும்.  **காலையில் பல் தேய்க்கும்போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மூக்கைச் சிந்தவும். ** சுவாசப் பாதையைச் சுத்தப்படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது. ** வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். ** மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.  **சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம். **வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். **பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.  **க...

முதுகுத் தண்டு

 முதுகுத் தண்டு என்பது உடலின் வேர். வேரை நலமாக வைத்திருந்தால், உடல் என்னும் மரம் மிகச்சிறப்பாக இருக்கும். முதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க 10 யோசனைகள்: ********    1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள். (தோப்புக்கரணம்                                                                    போடுவதும் மிகச் சிறந்தது)     2.தினம் இருபத்தோரு நிமிடங்கள் வேகமாக நடங்கள். 3. அமரும்போது வளையாதீர்கள். 4. ஒரு மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து உட்காராதீர்கள். 5. நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள். 6. சுருண்டு படுக்காதீர்கள். 7. கனமான தலையணைகளைத் தவிர்த்து விடுங்கள். கழுத்திற்கு நல்லதல்ல. முதுகும் பாதிக்கப்படும். 8. டூ வீலர் ஓட்டும்போது வளைந்து, குனிந்து ஓட்டாதீர்கள். 9. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள். குத்த வைக்கும் நிலையில் அமர்ந்து தூக்கப் பழகுங்கள். பா...

உங்கள் பாதங்களின் அடிப்பகுதியில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்திப் பாருங்கள்.

 உங்கள் பாதங்களின் அடிப்பகுதியில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்திப் பாருங்கள்.... என் தாத்தா தனது 87 வயதில் இறந்துவிட்டார், முதுகுவலி இல்லை, மூட்டு வலி இல்லை, தலைவலி இல்லை, பல் இழப்பு இல்லை .... ஒரு முறை அவர் பெங்களூரில் வசித்தபோது ஒரு முதியவரின் அறிமுகம் கிடைத்ததாகக் கூறினார். அம்முதியவர் "நான் தினமும் தூங்கும் முன் என் கால்களில் எண்ணெயை தடவி மசாஜ் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறேன்" என்று கூறி இருக்கிறார். மேலும் அது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது என்றும் கூறியிருக்கிறார் . ஒரு நாள் என் தாத்தா அங்கு ஹோட்டல் ஒன்றில் தங்கிய போது இரவில் தூங்க முடியாமல் அறைக்கு வெளியே சென்று அங்குமிங்குமாக நடந்து கொண்டிருப்பதை பார்த்த, வெளியே உட்கார்ந்திருந்த முதிய காவலாளி ஒருவர், "என்ன விஷயம்?" என்று கேட்க, என்னால் தூங்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்! அவர் சிரித்துக்கொண்டே, "உங்களிடம் தேங்காய் எண்ணெய் இருக்கிறதா?" என்று கேட்டிருக்கிறார். இல்லை என்று சொன்னதும், அவர் சென்று தேங்காய் எண்ணெயைக் கொண்டு வந்து, "உங்கள் கால்களின் பாதங்களை இதைக் கொண்டு இரண்டு மூன்று நிம...

உங்களால் சம்மணம் போட்டு உட்கார முடியுமா?

 உங்களால் சம்மணம் போட்டு உட்கார முடியுமா?    : "உங்களால் சம்மணம் போட்டு உட்கார முடியுமா? கடைசியாக எப்போது சம்மணம் போட்டு உட்கார்ந்தீர்கள்? என்றால்.. எனக்கு அப்படி உட்கார்ந்து பழக்கமே இல்லை. இன்று கஷ்டப்பட்டு செல்போனில் டைமரை வைத்து எத்தனை நிமிடம் உட்கார முடிகிறது என பார்த்தேன். 15 நிமிடம் உட்கார முடிந்தது. இதுவரை அப்படி உட்கார்ந்ததே இல்லை என்பதால் கால் முட்டிகள் இரண்டும் உயரத்தில் இருந்தன. கஷ்டபட்டு முட்டிகள் மேல் கையை வைத்து அமுக்கி உட்கார்ந்தேன், இப்படி உட்கார்வதால் முதுகை வளைக்கமுடியாது. முதுகு நேராக தான் இருக்கும். இப்படி ஒரு ஜிம்னாஸ்டிக்ஸுக்கு பின் எழுந்தால் முதுகெங்கும் நல்ல ஆயுர்வேத மசாஜ் செய்தது போன்ற அத்தனை இனிய உணர்வு. நாற்காலியில் உட்கார்வது சில பத்தாண்டுகளாக இருக்கும் வழக்கம்தான். அதற்கு முன் தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து தான் உண்போம், உட்கார்வோம். வீட்டுக்கு யாராவது வந்தால் "ஜமுக்காளத்தை விரி, பாயை விரி" என தான் முன்பு சொல்வார்கள். இப்ப தான் சேர், சோபா."  சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்.  நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திர...

14 மருத்துவ குறிப்புகளை மறக்காதீங்க

 இனி இந்த 14 மருத்துவ குறிப்புகளை மறக்காதீங்க !! ============= 🔵 1. ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து; ஆறவைத்து வடிகட்டி குடித்தால், அஜீரணம் சரியாகும். 🔵 2. வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும். 🔵 3. செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். 🔵 4. கற்பூரம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி, மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும். 🔵 5. கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும். 🔵 6. வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும். 🔵 7. ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு...

சாப்பிட்டவுடன் இதை செய்வதால் நோய்கள் உருவாகின்றன

சாப்பிட்டவுடன் இதை செய்வதால் நோய்கள் உருவாகின்றன இந்த 9 விஷயங்களை தவிர்க்கவும்  1. சாப்பிட்டவுடன்  தண்ணிரை  வயிறுமுட்ட  குடிக்க  கூடாது.  இதனால்  ஜிரணநீர்  நீர்ந்து  போய்  அஜிரணமாகும்  பல  நோய்கள்வர  இது  முக்கிய  காரணமாக  அமையும்.   2. சுமார் 40 நிமிடம் கழித்து  தண்ணீர்தாகம்  எடுக்கும்  அப்போது குடிக்கவேண்டும்.  3. சாப்பிட்டதும்  படுத்து விடக்கூடாது. காரணம், குடல்  தனது  செயல்பட மிகவும்  சிரமப்படும். ஜீரணம்  முறையாக  நடக்காது. 4. குறைந்தது  ஒரு  மணிநேரம்  கழித்தே  உறங்க  வேண்டும்.  இது  மதியம்  ஓய்வு  எடுப்பவர்களுக்கும்  பொருந்தும்.  5. சாப்பிட்டதும்  குளிக்க  கூடாது  குறைந்தது 2 மணிநேரம்  கழித்தே  குளிக்க  வேண்டும். 6. சாப்பிட்டு  முடித்ததும்  எந்த  பழங்களையும் சாப்பிடக்கூடாது.  காரணம்,  உணவின் ஜீரண நேரம் குறைந்தது  5 மணிநேரங்களாகும்....

வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!!

 வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!!         காலையில் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும்  எடுப்பான இடையைப் பெறலாம். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக  இருக்கும். ரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின்  அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும். கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, நல்ல கொழுப்புகளை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற  பிரச்சனையில் இருந்து பாதுகாப்பு தரும்.   நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.   கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடி...

மூச்சுப்பயிற்சி நன்மைகள்

 மூச்சுப்பயிற்சி  நன்மைகள் மூச்சுப் பயிற்சி செய்ய தரையில் நேராக உட்கார்ந்து, வலது மூக்கின் வழியாக மூச்சை உள்ளே இழுத்து, இடது மூக்கின் வழியாக மூச்சை வெளியே விட வேண்டும். அதேபோன்று, இடது மூக்கின் வழியாக மூச்சை உள்ளே இழுத்து, வலது மூக்கின் வழியாக வெளியே விட வேண்டும். இவ்வாறு மாறி மாறி பத்து பதினைந்து நிமிடங்களுக்கு செய்வதை மூச்சுப் பயிற்சி ஆகும். பிராணாயாமம் என்பது யோகாவின் ஒரு பகுதியாகும். இது பெரும்பாலும் மூச்சுப்பயிற்சி சம்பந்தப்பட்டவை. பிராணாயாமம் என்பது ‘பிராண’ மற்றும் ‘அயாமா’  என்ற வார்த்தைகளின் கூட்டாகும்.    பிராணாயாமம் மூலம் கிடைக்கும் அனைத்து பயன்களையும் அடைய வேண்டுமானால் அதனை விடிய காலை, சூரிய உதயத்தின் போது செய்திட வேண்டும்.   * நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களைத் தூண்டச் செய்து சக்கரங்கள் நன்றாக செயல்பட உதவுகிறது. உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை குணமாக்கும் சக்தி மூச்சுப் பயிற்சிக்கு உண்டு.   * மூச்சுப் பயிற்சி செய்வதால் சகஸ்ரார சக்கரம் தூண்டப்பட்டு, உடலை சுறுசுறுப்புடன் வைத்திருக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சி செய்வதால் நினைவாற்றல்  பெருகும் ...

தேங்காய் எண்ணெய் மசாஜ்

 உங்கள் பாதங்களின் அடிப்பகுதியில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்திப் பாருங்கள்.... என் தாத்தா தனது 87 வயதில் இறந்துவிட்டார், முதுகுவலி இல்லை, மூட்டு வலி இல்லை, தலைவலி இல்லை, பல் இழப்பு இல்லை .... ஒரு முறை அவர் பெங்களூரில் வசித்தபோது ஒரு முதியவரின் அறிமுகம் கிடைத்ததாகக் கூறினார். அம்முதியவர் "நான் தினமும் தூங்கும் முன் என் கால்களில் எண்ணெயை தடவி மசாஜ் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறேன்" என்று கூறி இருக்கிறார். மேலும் அது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது என்றும் கூறியிருக்கிறார் . ஒரு நாள் என் தாத்தா அங்கு ஹோட்டல் ஒன்றில் தங்கிய போது இரவில் தூங்க முடியாமல் அறைக்கு வெளியே சென்று அங்குமிங்குமாக நடந்து கொண்டிருப்பதை பார்த்த, வெளியே உட்கார்ந்திருந்த முதிய காவலாளி ஒருவர், "என்ன விஷயம்?" என்று கேட்க, என்னால் தூங்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்! அவர் சிரித்துக்கொண்டே, "உங்களிடம் தேங்காய் எண்ணெய் இருக்கிறதா?" என்று கேட்டிருக்கிறார். இல்லை என்று சொன்னதும், அவர் சென்று தேங்காய் எண்ணெயைக் கொண்டு வந்து, "உங்கள் கால்களின் பாதங்களை இதைக் கொண்டு இரண்டு மூன்று நிம...

Bioclock

 Bioclock என்றால் என்ன? நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock. நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும் 60 - 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம். 50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclock இல் செட் செய்துவிடுகிறோம். அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது. 70 வயதில் செத்து விடுகிறோம். நமக்கு தெரியாமலே நமது Bioclock ஐ தவறாக செட் செய்து விடுறோம். உதாரணம் 1: மனநிலை சரியில்லாதவர்களுக்கு வயதாவதில்லை. அவர்கள் தோற்றத்தில் பெரிதாக எந்த மாறுபாடும் இருக்காது என்ற உண்மை தெரியுமா? (இப்ப சொல்லுங்க, யார் மன நோயாளி என்று?) 2. சீனாவில் பெரும்பாலோனார் 100 வயது வாழ்கிறார்கள். அவர்களது Bioclock அப்படி செட் செய்யப் பட்டுள்ளது. எனவே நண்பர்களே, 1. நாம் குறைந்தது 100 வயது வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம். 2. நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 60 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம். 3. டை ...