மூலிகைப் பொடிகளும் அதன் பயன்களும்
மூலிகைப் பொடிகளும் அதன் பயன்களும் அருகம்புல் பொடி தினமும் அதிகாலையில் ஐந்து கிராம் அளவுள்ள அருகம்புல் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும். குணமாகும் நோய்கள் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், இரத்தப்புற்று நோய், இருமல், வயிற்று வலி, மூட்டு வலி ஆகியவை குணமாகும். மேலும் ஆரோக்கிய டானிக்காக செயல்படும் அருகம்புல் பொடியானது அலர்ஜி, நரம்பு தளர்ச்சி, உடல் கனம் ஆகியவற்றை குறைக்கும்.வாய்வு கோளாறு, தோல்நோய் போன்றவற்றை நீக்கும். ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.இரத்தம் சுத்தம் செய்யப்படுவதால் எந்த விதமான நோயும் அணுகாது. வல்லாரைப் பொடி தினமும் காலை, மதியம் சாப்பாட்டுக்கு பின் ஐந்து கிராம் அளவுள்ள வல்லாரைப் பொடியை நீர் மற்றும் தேனில் கலந்து காப்பிக்கு பதிலாக சாப்பிடலாம். குணமாகும் நோய்கள் ஞாபக சக்தி, மூளை வளர்ச்சி, நரம்பு தளர்ச்சி, புற்றுநோய், மஞ்சள் காமாலை, தொழுநோய், வாதநோய், நீரழிவு, சளி, சிறுநீர் பிரச்சனை, மாதவிடாய், யானைக்கால் நோய், காய்ச்சல் ஆகியவற்றைக் குணமாக்க வல்லது. வில்வப்பொடி தினமும் காலை உணவுக்கு பின் இரண்டு கிராம் அளவுள்ள வில்வப்பொ...