Posts

Showing posts from November, 2020

டாக்டர்களின் எதிரி நிலக்கடலை

*டாக்டர்களின் எதிரி* *நிலக்கடலை*  *சக்கரையை கொல்லும்* நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம். நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். நீரழிவு நோயை தடுக்கும்: நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்....

மாத்திரையின்றி #ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்...!!!

மாத்திரையின்றி #ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்...!!! 🎷குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு. அடுத்து வீட்டில் ஒவ்வொருவராய் மாறி மாறி சளி, காய்ச்சல் என வந்து குளிரோடு உடல் நிலையும் பாதித்து இம்சை பண்ணும்.  🎷குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன. 🎷சளி பிடித்தால், நமது உடலிலுள்ள வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன் சண்டையிடும். அவற்றை பூஸ்ட் அப் செய்வது போல் நமது மூலிகைகளைய அவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளை வெளியேற்றும். இது நடப்பதற்கு குறைந்தது 3 -5 நாட்களாகும். 🎷இப்படி இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளை நாம் மாத்திரைகள் கொண்டு தடுக்கும்போது, வெள்ளையணுக்கள் எதிர்த்து போரிடாமல் சோம்பேறியாகும். நமது உடல் எல்லாவ்ற்றிற்கும் மாத்திரைகளையே எதிர்பார்க்கும். ஆகவே முடிந்தாரை மாத்திரைகளை தவிர்த்து இயற்கை வைத்தியங்களை முயற்சியுங்கள். ☎குறிப்பு 1 : கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும். ☎குறிப்பு 2 ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்ற...

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்! #அவசியம்_தெரிந்து_பகிர்ந்துகொள்ள. 1. நெஞ்சு சளி.... 📖✍🏻  தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4. தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 5. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும். சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் க...

மலச்சிக்கல்

மூல நோய்க்கு மட்டுமல்ல வேறு பல பிரச்சனைகளையும் மூலகாரணமாக இருப்பது மலச்சிக்கல் பல சிக்கல்களுக்கு காரணம் மலச்சிக்கல் என்றால் அது மிகையில்லை. சித்த மருத்துவத்தில் எளிய மருந்துகள் உள்ளன அவற்றில் சில....  *மலச்சிக்கலால் ஏற்படும் உடல் கோளாறுகள்*  1. வாயு அதிகமாகி வயிறு உப்புசம் ஏற்படும் 2.பசியின்மை ஏற்பட்டு ரத்த குறைவு நோய் உண்டாகும்.  3. நீடித்த மலச்சிக்கலால் அல்சர் உண்டாகும்.  4.குடல்வால் நோய் ஏற்படும்.  5.மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும்.  6. மலச்சிக்கலால் உடலுறவு வேட்கை அதிகரிக்கும். 7. புத்தி மந்தம் உண்டாகும்.  8.வாய் துர்நாற்றம், உடல் துர்நாற்றம் உண்டாகும்.   *மலச்சிக்கலை முற்றிலும் குணப்படுத்த மருத்துவம்*  நிலாவரை பொடி100grm ஓமம் 10 gram பெருங்காயம் 10 gram பன்னீர் ரோஜா 50gram இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து பொடி செய்து கொள்ளவும் இதை தினம் இரவு சாப்பாட்டுக்கு பிறகு 5 gram அளவு எடுத்து வெந்நீரில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், வாய்வு கோளாறுகள், வயிற்று உப்புசம், போன்ற பிரச்சனைகள் தீரும் குடல் புழுக்கள் அழியும்.

பூண்டு உரிப்பு

Image

பல்வலி மருந்து

Image

சாப்பாட்டு மேஜை

Image

முருங்கை இலை

Image

biscuits

Image

சுளுக்கு வலி நீங்க

Image

தேங்காய் தண்ணீர்

Image

மீந்து போன சாதம்

Image

நெஞ்சு சளி

Image

யார் சுகவாசி?

யார் சுகவாசி?  1.சிரித்து மகிழ்ந்து வாழ்பவன் சுகவாசி. 2.அதிகாலையில் எழுபவன் சுகவாசி. 3.இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன் எப்போதும் சுகவாசி. 4.முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன் சுகவாசி. 5.மண்பானைச் சமையலை உண்பவன் சுகவாசி. 6.உணவை நன்கு மென்று உண்பவன் சுகவாசி. 7.உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன் சுகவாசி. 8.வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன் சுகவாசி. 9.கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன் சுகவாசி. 10.மலச்சிக்கல் இல்லாதவன் சுகவாசி. 11.கவலைப்படாத மனிதன் சுகவாசி. 12.நாவடக்கம் உடையவன் சுகவாசி. 13.படுத்தவுடன் தூங்குகிறவன் சுகவாசி. 14.எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும் சுகவாசி. 15.தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன் சுகவாசி. 16.கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன் சுகவாசி. 17.கற்பு நெறி தவறாது வாழ்பவன் என்றும் சுகவாசி. 18.மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன் சுகவாசி. 19.ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன் சுகவாசி. 20.வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன் சுகவாசி. 21.இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை ...

காயங்கள்,புண்கள்

காயங்கள்,புண்கள்(INJURiES) 1. 5கிராம் திரிபலாசூரணத்தை 200மிலி நீரிலிட்டுக் காய்ச்சி, காயங்களை கழுவி, மத்தன் தைலம் பூசிவர காயங்கள், புண்கள் குணமாகும் 2. பறங்கிப்பட்டை சூரணமாத்திரை2,தினம்3வேளை கொண்டு, குங்கிலிய வெண்ணை அல்லது அருகன்தைலம் பூச தீப்பட்ட காயங்கள் குணமாகும் 3. தவசுமுருங்கை இலைகளை இடித்து,வதக்கிக்கட்ட,அடிபட்ட காயம்,வீக்கம் குணமாகும் 4. மஞ்சளை அரைத்துப் பூச சிரங்குகள்,அடிபட்ட புண்கள்,கட்டிகள் குணமாகும் 5. அரத்தையை வெந்நீரிலரைத்துப் பூச அடிபட்ட வீக்கம்,வலி குணமாகும் 6. முட்சங்கன் வேர்பட்டையை யரைத்துப் பூச அடிபட்ட வீக்கம் கரையும் 7. ஊமத்தைசாறு,தே.எண்ணை சமன் கலந்து,காய்ச்சி,வடித்துப் பூச புண்கள், அழுகிய புண்கள் குணமாகும் 8. கோவை இலையை கசக்கிக் கட்ட ஆறாத புண்கள் ஆறும். 9. சிற்றாமுட்டி இலைகளையரைத்துப் பூச ஆறாத புண்கள் ஆறும் 10. அதிமதுரதூளை,நெய்விட்டுப் பிசைந்து பூச காயங்கள்,வெட்டுக்காயங்கள் குணமாகும் 11. அரிவாள்மனைபூண்டு இலைகளையரைத்துப் பூச.சாற்றினை விட்டுக்கட்ட, வெட்டுக் காயத்தினாலேற்பட்ட இரத்தப்போக்கு,காயம் குணமாகும் 12. அரிவாள்மனைபூண்டு இலைதூள்,சமன் தேன்மெழுகு,சி...

மலர்களின் மருத்துவப் பயன்கள்

மலர்களின் மருத்துவப் பயன்கள் மலர்கள் அந்த செடியின் முகவரிகள். மலரின் நிறமும் மணமும் காணும் போது தான் தோன்றும் இறைவன் என்னவொரு ரசனைக்காரன் என்று.எத்தன்னை கோடி மலர்களை படைத்துள்ளான். ஒவ்வொரு மலரும் தனக்கென தனி நிறம், அழகு, பயன்கள் கொண்டுள்ளது. அழகுக்காக, மருந்தாக, மணத்திற்கு, உணவாக என மலர்களின் பயன்களும் அதன் வகைகள் போன்று எண்ணிக்கையில் அடங்காதது. மலர்மருத்துவம், மூலிகை மருத்துவம், உணவே மருந்து என மலர்களின் மருத்துவப் பயன்களால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். மலர்களை ரசிக்க மட்டும் தெரிந்ததோடு மட்டும் அல்லாமல் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். சில முக்கியமான மலர்களின் மருத்துவப் பயன்கள் பற்றி பார்ப்போம். ஆவாரம் பூ Avarampoo benefits  மஞ்சள் நிறத்தில் கேட்பாரின்றி பூத்துக்குலுங்கும் கொத்து மலர்கள். மேனியின் நிறம் கூட்டும் மலர் இது. ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி 1 ஸ்பூன் உலர்ந்த ஆவாரம்பூ வை நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்...