Posts

Showing posts from April, 2022

கபத்தை விரட்டும் சிற்றரத்தை

 மூலிகையே மருந்து!  *கபத்தை விரட்டும் சிற்றரத்தை* தி இந்து தமிழ்பத்திரிக்கையில்  *மூலிகையே மருந்து *என்ற தலைப்பில் வெளியான அரசு சித்த மருத்துவர்டாக்டர் வி.விக்ரம்குமார் அவர்களின் மருத்துவ கட்டுரையின் நகல் பதிவு! நன்றி:தி இந்து தமிழ்பத்திரிக்கை. பெரிதும் பேசப்படாத சிற்றரசர்கள், எதிர்பாராத நிலையில் வலிமையான பேரரசனுக்கு நெருக்கடி தந்து வீழ்த்துவதைப் போல, மூலிகைகளில் அவ்வளவாகக் கவனிக்கப்படாத சிற்றரத்தை, வலிமைமிக்க கப நோய்களிடம் கடுமையாகப் போராடி அவற்றை வேரோடு அறுத்துத் தள்ளும்.  மூலிகைகளின் நோய் அகற்றும் தரத்தை, சிரத்தையுடன் உயர்த்திப் பிடிக்கும் அற்புதமான மூலிகை இது. ‘அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்’ என்ற வழக்கு மொழி,  கப நோய்களை வெட்டி வீழ்த்தும் அரத்தையின் வீரத்தைச் சொல்கிறது.  ‘அரத்தை இம்பூறல் முசுமுசுக்கை கோவை அதிமதுரம் இளக்கும் கோழை’ எனும் கோழையை வெளியேற்றும் மூலிகைத் தொகுப்பில் அரத்தைக்குச்  சிறப்பான இடமுண்டு. ஆரம்ப காலத்தில் மணமூட்டியாகச் சமையலில் இடம்பிடித்த சிற்றரத்தைக்கு மிகப் பெரிய மருத்துவப் பாரம்பரியம் உண்டு. சிற்றரத்தை பெயர்க்காரணம்: ...

சிறுநீரகத்தை பாதிக்கும் பழக்கங்கள்

*💫-சிறுநீரகத்தை பாதிக்கும் பழக்கங்கள்...* *💫-உடலின் 'கழிவுத் தொழிற்சாலை' என்று அழைக்கப்படும் சிறுநீரகங்கள் நம் வயிற்றின் பின்பக்கம் கீழ் முதுகுப் பகுதியில் முதுகுத்தண்டின் இருபுறமும் அவரை விதை வடிவத்தில் அமைந்துள்ளன...* *💫-ஒவ்வொன்றிலும் பத்து லட்சம் நெப்ரான்கள் உள்ளன. நெப்ரான்கள் என்பவை ரத்தத்திலிருந்து கழிவுகளைப் பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்றுகின்ற நுண்ணிய முடிச்சுகள்...* *💫-வீட்டுக்குக் கழிவறை எப்படி முக்கியமோ அதுமாதிரி நம் உடலுக்குச் சிறுநீரகம் முக்கியம்...* *💫-இதயத்திலிருந்து வெளியாகும் ரத்தத்தில் 25 சதவீதம் வரை சிறுநீரகம் பெறுகிறது. அதிலிருந்து உடலுக்குத் தேவையான குளுக்கோஸ், அமினோ அமிலம், வைட்டமின்கள், ஹார்மோன்கள் போன்றவற்றைத் தேக்கிவைத்துக்கொண்டு தேவையற்ற யூரியா, குளோரைடு போன்ற கழிவுப்பொருள்களைப் பிரித்தெடுத்து வெளியேற்றும் முக்கியமான பணியைச் சிறுநீரகம் செய்கிறது...*  *💫-உங்கள் சிறுநீரகங்களுக்கு பெருமளவில் பாதிக்கும் 8 பொதுவான பழக்கங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது...* *💫-1. அதிகப்படியான வலி நிவாரணிகள் - வலி நிவாரணிகள் அதாவது ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு...

40 வயதுக்கு மேல் ஏற்படும் கொழுப்பு கல்லீரலை சரிசெய்யும் 4 எளிய வழிகள் என்னென்ன

*40 வயதுக்கு மேல் ஏற்படும் கொழுப்பு கல்லீரலை சரிசெய்யும் 4 எளிய வழிகள் என்னென்ன...* ஆரோக்கியமான கல்லீரல் நம்முடைய வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்துகிறது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலுக்குத் தேவையானஎனஜியைக் கொடுக்கிறது. மென்ஷியா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இதுவே கல்லீரலில் கொழுப்பு தேங்கும்போது இந்த செயல்பாடுகள் எல்லாமே சிதைவடைகின்றன. கொழுப்பு கல்லீரல், இரண்டு வகைகளில் உண்டாகிறது. 1. மதுவால் ஏற்படும் கல்லீரல் கொழுப்பு 2. மது அருந்தாதவர்களுக்கு ஏற்படும் கல்லீரல் கொழுப்பு ஆல்கஹால் எடுத்துக் கொள்ளாதோருக்கு ஏற்படும் கல்லீரல் கொழுப்பு பிரச்சினையால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் தீவிர அறிகுறிகள் தோன்றாத வரை எளிதில் கண்டறிய முடிவதில்லை. அதிலும் குறிப்பாக, 40 வயதைக் கடந்த பெண்களில் கிட்டதட்ட 80 சதவீதம் பேர் கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்படுகின்றனர். முட்டை : முட்டை முழுக்க முழுக்க புரதத்தால் ஆனது. அதனால் நம்முடைய அன்றாட புரதத் தேவையைப் பூர்த்தி செய்ய தினசரி உணவில் முட்டை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது. கொலஸ்டிரால் பிரச்சின...

உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியாக்க சில டிப்ஸ்

*உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியாக்க சில டிப்ஸ் !!* உடல் சூடு இருந்தால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் இருக்கிறது. பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு நம் உடல் சூடும் ஒரு காரணம். உடலின் வெப்பநிலையைக் குறைக்க தண்ணீர் குடிப்பது உதவும். வெள்ளரி, தர்பூசணி, கிர்ணி, முலாம் பழம், நுங்கு ஆகியவை உடலைக் குளிர்ச்சியாக்கும். இளநீரைக் குடித்து வந்தாலும் வெப்பநிலை குறையும். சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து, அதை இளநீரில் அல்லது பாலில் அல்லது பழச்சாறுகளில் அல்லது அப்படியே வெறுமனே குடிக்கலாம். உடலின் வெப்பம் தணியும். தினமும் 2 டம்ளர் நீர்மோரை காலை 11 மணி அல்லது மாலை 4 மணி அளவில் குடித்து வந்தால் உடலின் வெப்பநிலை சரியாக இருக்கும். 2 ஸ்பூன் வெந்தயத்தை முன்னாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயம் அந்தத் தண்ணீரையும் சேர்த்துக் குடிக்கலாம். விருப்பப்பட்டால் சிறிது மோருடன் கலந்து குடிக்கலாம். புடலங்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌ சௌ, முள்ளங்கி, கேரட் ஆகியவை உடலுக்குக் குளிர்ச்சி தரும். சந்தன கட்டை சிறிதளவு கிடைத்தால், அதைத் தினமும் இழைத்து முகத்தில் உடலில் பூசி குளித்தால்...