ஆசனம் செய்தால் அமைதி பெருகும்
*🧎♀️ஆசனம் செய்தால் அமைதி பெருகும்🧎♂️*
*🧑🦰➖பத்மாசனம்➖👩🦰*
*1)ஒரு விரிப்பில் அமரவும். 2)கால்களை நீட்டிக் கொள்ளவும்* *3)முதலில் வலது காலை மடக்கி இடது தொடையின் மீது வைக்கவும்*
*4)பிறகு இடது காலை வலது தொடையின் மீது வைக்கவும்*
*5)குதிகால்கள் அடி வயிற்றை தொட்டுக் கொண்டிருக்கட்டும் முதுகை நிமிர்த்தி நேராக உட்காரவும்*
*6)கை விரல்களை சின் முத்திரையில் முழங்கால் மீது வைக்கவும்*
*7)பார்வை மூக்கு நுனியில் இருக்கட்டும்*
*8)சில வினாடிகள் இருந்து பழைய நிலைக்கு வரவும் பின்னர் முதலில் இடது காலை மடக்கி வலது தொடை மீது வைக்கவும் அடுத்து வலது காலை மடக்கி இடது தொடையின் மீது வைக்கவும் பின்பு 5,6,7,8, எண் முறைகளை பின்பற்றவும்*
*🙋♂️பயன்🙋♀️*
*🧍♀️முதுகுத் தண்டு நேராகும் நுரையீரலில் உயிர்க் காற்று அதிகமாக புகும்: இடுப்பு உறுப்புகளில் ரத்த ஓட்டம் செம்மையடையும்; மன ஒருமைப்பாடு ஏற்படும்.🧍🏼♂️*
Comments
Post a Comment