சர்க்கரை நோயைக் கட்டுப் படுத்தும் எளிய உணவே மருந்து முறை


சர்க்கரை நோயைக் கட்டுப் படுத்தும் எளிய உணவே மருந்து முறை

1)            வெந்தயம்
வெந்தயத்தைப் பயன் படுத்தி ஆரம்ப நிலை சர்க்கரை இருக்கும்போது சர்க்கரை கட்டுக்குள் வரும் ஆனால் ஐந்து வருடங்களுக்கு மேல் இருந்தால் அவ்வளவாகப் பயனளிப்பதில்லை என பலர் சொல்கிறார்கள்

ஆனால் அனைவருக்கும் எத்தனை வருடங்கள் சர்க்கரை நோய் இருந்தாலும் இன்சுலின் போடுபவர்களுக்கும் வெந்தயம் மிக சிறந்த மருந்தாகப் பயனளிக்கும்
அதற்கு வெந்தயத்தைப் பயன்படுத்தும் முறை இங்கே கொடுக்கப் படுகிறது
வெந்தயப் பால் செய்யும் முறை
உடல் எடைக்கு பாதியளவு கிராம் அளவுக்கு வெந்தயத்தை  எடுத்து ( எழுபது கிலோ எடை இருப்பவர் முப்பத்தி ஐந்து கிராம் வெந்தயம் பயன்படுத்த வேண்டும்)
 ஒருநாள் இரவு முழுவதும் ஊற வைத்து
மறுநாள் காலையில் தண்ணீரை வடித்து விட்டு
 துணியில் முடிந்து மூன்று நாட்கள் முளை கட்ட வேண்டும்
நான்காவது நாள் காலையில் எடுத்து மிக்ஸியில் போட்டு இருநூறு மில்லி கொதிக்கும் நீரை விட்டு அரைத்து துணியில் பிழிந்து கிடைக்கும் பால் காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம்
இப்படி பிடிக்காதவர்கள் மூன்று நாட்கள் முளை கட்டிய வெந்தயத்தை அப்டியே மென்று தின்று விழுங்கலாம்
இவ்வாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் சாப்பிட்டு வர படிபடியாக சர்க்கரை நோய் குறையும்

2)            கீரைகள்
தினசரி உணவில் குறைந்தது நூறு கிராம் கீரையாவது மதியம் உணவில் சேர்க்க வேண்டும் எந்தக் கீரை என்றாலும் பயன்படுத்தலாம் முருங்கைக் கீரை வெந்தயக் கீரை வல்லாரைக் கீரை அகத்திக் கீரை மணதக்காளிக் கீரை பொன்னாங்கண்ணி கீரை சிறுகீரை என்று எந்தக் கீரை என்றாலும் தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்

3)            அருகம்புல்
ஒரு கைப்பிடி அருகம்புல்
ஒரு பத்தை தேங்காய்
ஒரு தேக்கரண்டி சீரகம்
ஆகிய  மூன்று பொருட்களையும் சேர்த்து இருநூறு மில்லி தண்ணீர் விட்டு அரைத்து சாறு பிழிந்து காலை வெறும் வயிற்றில் அல்லது காலை பதினொரு மணி அளவில் குடிக்க வேண்டும்
தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் இவ்வாறு குடித்து வர
உடல் எடை குறையும்

 இன்சுலின் போட்டுக் கொண்டு இருப்பவர்களின் தேவையற்ற எடை அதிகரிப்பு கட்டுக்குள் வரும்
 உடல் சுறுசுறுப்பு அடையும்
உடல் சோர்வு குறையும் இரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவது குறையும்

குறிப்பு

காலை வெறும் வயிற்றில் முளை கட்டிய வெந்தயம் சாப்பிடுபவர்கள் காலை பதினொரு மணி அளவில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும்

4)            புதினா
புதினாவை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோயே வராது
எனவே சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் தினமும் உணவில் புதினாக் கீரையை சேர்த்து வர வேண்டும்


5)  முருங்கைக்கீரை
வாரம் நான்கு நாட்களாவது முருங்கைக் கீரை சூப்பாகவோ உணவாகவோ
அல்லது நிழலில் காயவைத்து அரைத்த சூரணம் ஒரு தேக்கரண்டி தினமும் சாப்பிட்டு வர
மிகப் பெரிய அளவில் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்
குறிப்பாக சிறுநீரில் சர்க்கரை மற்றும் புரதம் வெளியேறுவது மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டு கட்டுக்குள் வரும்

6)            மஞ்சள் பூசணி
 சர்க்கரை அதிகமான அளவு 400 -- 500 என்று இருக்கும்போது கூட மஞ்சள் பூசணிக்காயை உணவில் தினமும் சேர்த்து வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்

7)            காலி பிளவர் மற்றும் முட்டைக் கோசு
நார் சத்துள்ள உணவுகளை உணவில் சேர்க்கும்போது உடலுடைய ஆரோக்கியம் மேபட்டு சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்
வாரம் இரண்டு முறையாவது இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது
இரண்டும் சர்க்கரை நோய்க்கு மிக சிறந்த நண்பன் ஆனால்
தைராய்டு நோய் இருப்பவர்கள் சாப்பிடக் கூடாது

8)            பூண்டு
சர்க்கரை நோயைக் கட்டுப் படுத்தும் மிக சிறந்த மருந்து ஒரு நாளைக்கு ஏழு கிராம் அளவுக்கு பூண்டு உணவில் சேர்த்துக் கொள்ள சர்க்கரை நோய் வருவது குறைவு
சர்க்கரை நோயினால் வரும்  பக்க விளைவுகள் நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகள் டயாபடிக் நியூரோபதி போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும்


பூண்டு அனுபவ மருத்துவமாக
ஒவ்வொரு வேளை சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னர் 

நான்கு நாட்டு பூண்டு பற்கள் எடுத்து

 மிக சிறு துண்டுகளாக நறுக்கி
அல்லது சிறு கல் உரவில் இடித்து விழுதாக்கி
அல்லது அம்மியில் வைத்து அரைத்து விழுதாக்கி
பத்து நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து
பின் வாயில் போட்டு தண்ணீர் குடித்து

மாத்திரை விழுங்குவது போல
விழுங்கி விட வேண்டும்
எரிச்சல் இருந்தால் கொஞ்சம் அதிகம் தண்ணீர் குடிக்கலாம்
தொடர்ந்து நாள்தோறும் மூன்று வேளைகளும் இவ்வாறு சாப்பிட்டு வர

 பதினைந்து நாட்கள் முதல் இருபது நாட்களில்
குணம் தெரிய ஆரம்பிக்கும்
என்று பலர் தங்கள் அனுபவத்தை கூறுகிறார்கள்

9)            வெள்ளை வெங்காயம்
தினமும் ஒரு வெள்ளை வெங்காயத்தை அரைத்து விழுதாக்கி  மோரில் கலந்து காலை பதினொரு மணிக்கு குடித்து வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்

10)  இஞ்சி
கார்போ ஹைட்ரேட் உணவுகளோடு இஞ்சி சேர்த்து சாப்பிடும்போது
( குறிப்பாக பொங்கல் போன்ற உணவுகளில் ) உடலில் செரிக்கும் விகிததங்களின் மாறுபாடுகள் தேவையற்ற இரத்ததில் இருக்கும் சர்க்கரை சத்து  அதிகமாக்காமல் பார்த்துக் கொள்ளும்
கொழுப்புகளும் தேவையற்ற கார்போகைட்ரேட் சத்துகள் சத்துகள் உடலில் சேராமல் பார்த்துக் கொள்கிறது
உடல் செரிப்பதற்கு நேரம் ஆக ஆக வளர்சிதை  மாற்றம் ஏற்படுவது மாற்றம் அடையும் அதை சரி செய்ய இஞ்சி மிகப் பெரிய அளவில் உதவும்
தினமும் பத்து கிராம் அளவு இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் காலை மதியம் இரவு என ஒவ்வொரு வேளைக்கும் மூன்று கிராம் இஞ்சி உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்

11)          வெண்டைக்காய் 
வெண்டைக்காயை சாப்பிட்டு சர்க்கரை குறையவில்லை என்று பலர் கூறுவார்கள் ஆனால் வெண்டைக்காயை சர்க்கரை நோயைக் கட்டுப் படுத்த சாப்பிட வேண்டிய முறையில் சாப்பிட்டால் பலன் தரும்

உடல் எடை  அறுபது கிலோ இருப்பவர்கள்  முப்பது கிராம் வெண்டைக்காயை காம்பு பகுதியை வெட்டாமல்
வால் பகுதியாகிய நுனிப் பகுதியை மட்டும் வெட்டி
தண்ணீரில் முழுமையாக ஒரு இரவு முழுவதும் வெண்டைக்காய் நிற்கும் நிலையில் ஊற வைக்க வேண்டும்  படுக்கும் நிலையில் ஊற வைக்கக் கூடாது

காலையில் இப்படி ஊற வைத்த வெண்டைக்காய் ஊறல் நீரை குடித்து வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்
ஊறிய வெண்டைக்காயை சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்

12)            பாகற்காய் 
பாகற்காய் சாப்பிடும் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரவில்லை என்று குறை பாடுவோர் உண்டு பச்சையாக அரைத்து சாறு குடித்துப் பார்த்து விட்டேன் சர்க்கரை கட்டுக்குள் வரவில்லை என்று சொல்வார்கள்

ஆனால் பச்சையாக பாகற்காய் சாறு குடித்தால் சர்க்கரை குறையாது
வேகவைத்த பாகற்காய் அல்லது பாகற்காய் சூப் அல்லது பாகற்காயை உணவாக சமைத்து சாப்பிட சர்க்கரை குறைந்து கொண்டே வரும்

13)            காரட்
தினமும் இரண்டு காரட்டுகளை  மென்று சாப்பிட்டு வந்தாலே சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்

14)            அசைவ உணவுகள்
சர்க்கரை நோயைக் கட்டுப் படுத்துவதில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது
காலையில் நாட்டுகோழி முட்டை பகல் உணவில் இறைச்சி சாப்பிட்டு வர சர்க்கரை கட்டுப்படும்
பேலியோ உணவு முறை இதையே வற்புறுத்துகிறது
வெறும் அசைவ உணவுகளை மட்டுமன்றி கூடவே காய்கறிகள் கீரைகள் பழங்களும் உணவில் சேர்த்து வருவது நல்லது
மருந்துகளை மட்டுமே நம்பி இல்லாமல் இந்த உணவு முறைகளைப் பின்பற்றி வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்
படிப்படியாக எந்த மருந்து மாத்திரைகளும் இன்றி சர்க்கரை நோய் கட்டுக்குள் வைத்து நலமுடன் வாழலாம்.

Comments

Popular posts from this blog

வெந்தயம், ஓமம் & கருஞ்சீரகம்

தைராய்டு வருவதற்கான காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வுகள்

விதை மருத்துவம்