எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் முறை
எண்ணெய்
கொப்பளித்தல் செய்யும் முறை
நோயற்ற
வாழ்வே குறைவற்ற செல்வம்“ வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்” என்பது
பழமொழி. இதே போல மற்றொரு
அனுபவ உண்மை என்னவெனில், வாயில்
நல்லெண்ணெய் விட்டு கொப்பளித்து வந்தால்
நோய்கள் பல நீங்கும். நல்லெண்ணெய்
மருத்துவம், நல்லெண்ணெயின் மகத்துவத்தை உணர்த்துகிறது. சிரமம் ஏதுமின்றி மிக
எளிதாக செய்யக் கூடிய எண்ணெய்
கொப்பளித்தலை செய்து வருவது நமது
உடல் நலத்தைப் பேணிக்காக்கும்.
எண்ணெய்
கொப்பளித்தல் செய்யும் முறை
சுத்தமான
நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து,
வாயில் விட்டுக் கொண்டு அதை வாய்
முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 21 நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம். பற்களின்
இடைவெளிகளுக்குள் எண்ணெய் போகும் படி
செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் எண்ணெய் நுரைத்து, வெண்மையாகி
நீர்த்துப்போகும். அப்போது அதை உமிழ்ந்து
விட வேண்டும். அதன் பிறகு வாயை
நன்கு கழுவிக்கொள்ளவும்.
எந்தநேரத்தில்
செய்யவேண்டும்?
இந்த எண்ணெய் மருத்துவம் செய்வதற்கு
ஏற்ற நேரம் அதிகாலை. நாம்
பல் தேய்த்த பிறகு, உணவு
உட்கொள்ளும் முன்பு எனில் மிக
நல்ல பலன் கிடைக்கும்.
எவ்வளவு
காலம் செய்ய வேண்டும்?
நல்ல பசி, ஆழ்ந்த அமைதியான
உறக்கம், நல்ல மனநிலை ஆகியவை
வரும் வரைக்கும் எண்ணெய்க் கொப்பளிப்பு தொடர்ந்து செய்ய வேண்டும். ஆனால்
9 மாதம் முதல் ஓர் ஆண்டு
வரை எண்ணெய்க் கொப்பளிப்பு செய்வதை தொடர்ந்தால் உடலுக்கு
நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.
நன்மைகள்:
வெள்ளையான
பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகள். தினமும்
ஆயில் புல்லிங் செய்து வந்தால், பற்களில்
உள்ள கறைகள் நீங்கி , பற்கள்
வெள்ளையாகவும் , ஆரோக்கியமானதாகவும் காணப்படும்
வாய்துர்நாற்றம்:
தினமும்
காலையில் ஆயில் புல்லிங் செய்து
வந்தால், வாயில் உள்ள கிருமிகள்
அனைத்தும் வெளியேறி, வாய் துர்நாற்றம் அடிக்காமல்
இருக்கும்.
ஈறுகளில்
ஏற்படும் இரத்தக்கசிவு:
ஈறுகளில்
இரத்தக்கசிவு ஏற்பட்டால், ஆயில் புல்லிங் செய்தால்,
இரத்தக்கசிவு ஏற்படுவது தடுக்கப்பட்டு, ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
பல் கூச்சம் நின்று பல்
வலி மறையும்.
உடலின்
எனர்ஜி அதிகரிக்கும்:
ஆயில் புல்லிங்கை தினமும் செய்தால், உடலின்
ஆற்றலானது அதிகரித்து, நாள் முழுவதும் நன்கு
சுறுசுறுப்புடன் இருக்கலாம்.
ஒற்றை தலைவலி:
ஒற்றை தலை வலியால் அவஸ்தைப்
படுபவர்கள், தினமும் ஆயில் புல்லிங்
செய்து வந்தால், அந்த தொல்லையில் இருந்து
விடுபடலாம்.
சைனஸ் ஆஸ்துமா:
சைனஸ் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள்,
தினமும் ஆயில் புல்லிங் செய்தால்
, இந்த பிரச்சனைகள் குணமாகும்.
நிம்மதியான
தூக்கம்:
தூக்கமின்மையால்
அவஸ்தைப் படுபவர்கள் ஆயில் புல்லிங் செய்தால்,
இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
பொலிவான
சருமம்:
ஆயில் புல்லிங் செய்தால், உடலில் உள்ள நச்சுக்கள்
வெளியேறி, சருமம் பொலிவோடு இருக்க
உதவும்.
தைராய்டு:
தைராய்டு
உள்ளவர்கள், ஆயில் புல்லிங் செய்து
வந்தால், தைராய்டு ஹார்மோனை சீராக சுரக்க செய்து,
தைராய்டு பிரச்சனையைக்க ட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
பார்வைக்கோளாறு:
பார்வைக்கோளாறு
இருந்தால், ஆயில் புல்லிங் செய்து
வர பார்வைக் கோளாறானது சரியாகும்.
மூட்டுபிரச்சனைகள்:
மூட்டுகளில்
பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங்
செய்து வந்தால் அது மூட்டுகளில்
ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை
குணமாக்கும்.
சிறுநீரக
செயல்பாடு:
தினமும்
ஆயில் புல்லிங் செய்தால், சிறுநீரக கோளாறு ஏற்படாமல் , சிறுநீரகமானது
சீராக செயல்படும். தோலின் மீது குழிகளும்
வெடிப்புகளும் மறைந்து தோல் பளபளப்பாகிறது.
கை ,கால், விரல்கள் மெருகுற்று
ரத்த ஓட்டம் பெருகியதற்கான அறிகுறிகள்
தெரியும். தோல் அரிப்புகள் படிப்படியாக
குறைந்து 3 மாதங்களில்
மறையும். பொடுகு தொல்லை தீரும்.
பருக்கள் அனைத்தும் மறைந்து முகம் பொலிவு
பெறும்.
Comments
Post a Comment