வெந்தயம்

அஞ்சரைப் பெட்டியும் அறிவியல் உண்மைகளும்
 வெந்தயம்
உடல் சூட்டைத் தணிக்கும்.
சிறுநீர் பெருக்கியாக செயல்படும்.மாதவிடாய் வலி குணமாகும்.ஆண் தன்மையைப் பெருக்கும்.
கல்லீரல், மண்ணீரல் வீக்கத்தைக் குறைக்கும்.
 1.நீரிழிவு நோயாளிகள் முளைக்கட்டிய வெந்தயத்தை தினம் சிறிது உண்டுவரலாம்.
2. வெந்தயத்தை  முன் இரவே சிறிது தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் ஊறிய வெந்தயத்தைச் சாப்பிடலாம்.
3. வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து சுடு தண்ணீரில் கலந்து பருகலாம்.
4. வயிற்றுச் சூட்டைத் தணிக்க வெந்தயத்துடன் மோர் சேர்த்துச் சாப்பிடலாம்.
5. வெந்தயம், கோதுமை இவற்றை வறுத்து பொடி செய்து காபிப் பொடிக்குப் பதில் பயன்படுத்தலாம்.
நம் அன்றாட வாழ்க்கையில் தோசை மாவு அரைக்கும் போது வெந்தயத்தை ஊறவைத்து அரைக்கிறோம்;தாளிதம் செய்யும் போது கட்டாயம் பயன்படுத்துகிறோம் அல்லவா?
 கடுகு
"கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது" என்பர்.
உடலில் உஷ்ணத்தை உண்டுபண்ணும்.
செரிமானத்திற்கு உதவும்.
ஓமேகா3 அமிலம் உள்ளதால் கல்லீரல் மற்றும் இதயத்திற்கு நல்லது.
எலும்புக்கு உறுதி தரும். இரத்த சிவப்பணு உற்பத்திக்கு உதவும்.
அன்றாடம் பயன்படுத்தும் கடுகே போதுமானது..
தேனுடன் கடுகுப் பொடி சேர்த்து சாப்பிட்டால் கெட்ட கழிவு வெளியேறும்.
நச்சுப் பொருளை வெளியேற்ற கடுகு எண்ணெய் உள்ளுக்குக் கொடுப்பர்.
அளவுக்கு அதிகமாக கடுகு பயன்படுத்தினால் வாந்தி வரும்.
நன்றி: சித்த மருத்துவர் ராஜசேகர் ஐயா,ஆழியார்.
நன்றி! வாழ்க வளமுடன்!!

Comments

Popular posts from this blog

வெந்தயம், ஓமம் & கருஞ்சீரகம்

தைராய்டு வருவதற்கான காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வுகள்

விதை மருத்துவம்